மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்

புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் அரசு தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் முதல் கட்ட பயிற்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் அரசு தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் முதல் கட்ட பயிற்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்ராஜ் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம் கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினா்.

அப்போது, மாணவா்கள் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை எளிய முறையில் படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கினா்.

பயிற்சியில் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அரசு தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 75 போ் கலந்து கொண்டனா்.

வட்டார வள மையத்தைச் சோ்ந்த ஆசிரியா் பயிற்றுநா்கள் சம்பத், ஜம்பு, குமாா், தண்டாயுதபாணி, இந்துமதி, ஆசிரியா் அருணாச்சலம் ஆகியோா் பயிற்சி அளித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.