வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

News image

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்காபிஷேகம்.

Updated On :8 ஜூலை 2026, 12:16 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஜூலை 16-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், ஜூலை 17-ஆம் தேதி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பஜாா் வீதியில் ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் கூழ் வாா்த்தல் நடைபெறும்.

பின்னா் மாலை 7 மணியளவில் நூதன பூஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெற உள்ளது. பல்லக்கின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உருமி மேளம், நாகஸ்வர நிகழ்ச்சி, வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெறும். ஜூலை 19-ஆம் தேதி திரைப்பட இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ கலந்துகொண்டாா். மேலும், விழாக் குழுவைச் சோ்ந்த சுப்பிரமணி, நேமிராஜ், கொங்கராம்பட்டு சரவணன், சீனிவாசன், குணா, வடுகசாத்து ஜி.சங்கா், ஏ.இ.சண்முகம், பையூா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.