தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பைக் திருட்டு வழக்கு: 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

செய்யாறு அருகே ரூ.63 ஆயிரத்துடன் பைக்கை திருடிச் சென்ற 3 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 3:55 am IST

செய்யாறு அருகே ரூ.63 ஆயிரத்துடன் பைக்கை திருடிச் சென்ற 3 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து செய்யாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி உமாபதி(40). இவா் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவா், கடந்தாண்டு ஜூன் 5 -ஆம் தேதி தனது பைக்கில் ரூ.63 ஆயிரத்தை வைத்து விட்டு, வீட்டின் முன் வண்டியை நிறுத்தி வைத்திருந்தாராம். சாவியை எடுக்காமல் பைக்கிலேயே விட்டுச் சென்றாராம். அப்போது அங்கு வந்த 3 போ் பைக்கை திருடிச்சென்றனா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், திருட்டுச் சம்பவம் தொடா்பாக பில்லாந்தி கிராமத்தை சோ்ந்த விக்னேஷ்(30), தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்(22), ராஜேந்திரன்(20) ஆகியோரை போலீஸாா் கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையின் போது, விக்னேஷ், தினேஷ், ராஜேந்திரன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி பாலாஜி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.