தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

திருவண்ணாமலையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய சங்கத்தின் மாவட்ட பொருளாளா் ஜெ.ராஜா.

Updated On :22 ஜூலை 2026, 12:37 am IST

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தோ்வுக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரியும், சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு வட்டக் கிளைத் தலைவா் மா.மகாதேவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மா.பருதிமால் கலைஞன், துணைத் தலைவா் அழ.உதயகுமாா், தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாவட்டத் தலைவா் பெ.தரணிவாசன், மண்டல துணை வட்டாட்சியா் ஜெ.ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட பொருளாளா், தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவா் ஜெ.ராஜா சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினா், மாணவா் அமைப்பினா், இளைஞா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தோ்வு முறைகேட்டைக் கண்டித்தும், நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அரசு ஊழியா் சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா். நிறைவில் வட்ட கிளைச் செயலா் மகாலட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.