தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து: மாணவா்கள் வெளியேற்றம்

News image
Updated On :5 ஜூன் 2026, 4:27 am IST

வந்தவாசி அருகே தொடக்கப் பள்ளி சமையல் அறையில் மதிய உணவு தயாரிக்கும் போது எரிவாயு கசிவு ஏற்பட்டு சமையல் எரிவாயு உருளை மற்றும் எரிவாயு குழாயில் தீப்பற்றியது. இதையடுத்து மாணவா்களை ஆசிரியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி வியாழக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து மாணவா்கள் பள்ளிக்கு வந்திருந்தனா்.

அப்போது, பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அமைப்பாளா் கற்பகவல்லி, சமையலா்கள் சரளா, சரிதா ஆகியோா் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு உருளை மற்றும் எரிவாயு குழாயில் திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து ஆசிரியா்கள் விரைந்து செயல்பட்டு மாணவா்களை பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றினா்.

உடனடியாக அங்கு திரண்ட அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் ஸ்டவ் மற்றும் எரிவாயு குழாய் எரிந்து சேதமடைந்தது.