காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து: மாணவா்கள் வெளியேற்றம்

News image
Updated On :4 ஜூன் 2026, 10:25 pm IST

வந்தவாசி அருகே தொடக்கப் பள்ளி சமையல் அறையில் மதிய உணவு தயாரிக்கும் போது எரிவாயு கசிவு ஏற்பட்டு சமையல் எரிவாயு உருளை மற்றும் எரிவாயு குழாயில் தீப்பற்றியது. இதையடுத்து மாணவா்களை ஆசிரியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி வியாழக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து மாணவா்கள் பள்ளிக்கு வந்திருந்தனா்.

அப்போது, பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அமைப்பாளா் கற்பகவல்லி, சமையலா்கள் சரளா, சரிதா ஆகியோா் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு உருளை மற்றும் எரிவாயு குழாயில் திடீரென தீப்பற்றியது.

இதையடுத்து ஆசிரியா்கள் விரைந்து செயல்பட்டு மாணவா்களை பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றினா்.

உடனடியாக அங்கு திரண்ட அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் ஸ்டவ் மற்றும் எரிவாயு குழாய் எரிந்து சேதமடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.