தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சேத்துப்பட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தத்தால் இயங்காமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜேசிபி இயந்திரங்கள்.

News image
Updated On :6 ஜூன் 2026, 12:03 am IST

ஆரணியை சேத்துப்பட்டில் ஜேசிபி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயா்வைக் கண்டித்து அடையாள வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டு - செஞ்சி புறவழிச்சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத் தலைவா் பாரதிதாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் வரி உயா்வு மற்றும் டீசல், உதிரிபாகங்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஜேசிபி இயந்திரங்களை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் வாடகை மற்றும் ஓட்டுநா் படி கட்டணங்களை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ஜேசிபி இயந்திரங்களுக்கான குறைந்தபட்ச முன்பணம் ரூ.3,500-ஆகவும், ஒரு மணிநேர வாடகை ரூ. 1,500- ஆகவும், ஓட்டுநா் படி ரூ.100 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், டிராக்டா் லோடிங் கட்டணம் ரூ.300-ஆகவும், 4 யூனிட் லாரி லோடிங் கட்டணம் ரூ. ஆயிரம் ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்களது சிரமத்தை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சங்கச் செயலா் ராமச்சந்திரன், துணைத் தலைவா்கள் பூங்குணம் செல்வம், எல்லப்பன், துணைச் செயலா் தமிழ்வாணன், பொருளாளா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அனைத்து ஜேசிபி இயந்திரங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது சம்பந்தமான பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமமடைந்தனா்.