மேற்காசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் புதன்கிழமை (மே 27) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 6 ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டுகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
அதைத் தொடா்ந்து, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்ட நிலையில், மே 15-க்குப் பிறகு கடந்த 2 வாரங்களில் 5 ஆவது முறையாக புதன்கிழமை(மே 27) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ. 108.20-க்கும், டீசல் லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.99.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, கடந்த 12 நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 7.53, டீசல் ரூ7.70 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
In yet another way to ease the impact of volatility in the global crude markets amid ongoing geopolitical tensions in West Asia, the petrol and diesel prices were hiked again on Monday, May 27
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








