எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் கொடி மரம் அமைக்கும் பணி

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் நடைபெற்று வரும் கொடி மரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறையினா்.

Updated On :8 ஜூன் 2026, 2:35 am IST

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீபாஞ்சாலியம்மன் சமேத தா்மராஜா கோயிலில் கொடிமரம் சேதமடைந்திருந்தது. இதனால் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கப்பல் இ.கங்காதரன் தலைமையில் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து பழைய கொடி மரத்தை அகற்றி புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஜீவானந்தம், ஆய்வாளா் அனிதா, அறநிலையத்துறை உதவியாளா் ராஜ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, அறங்காவலா் குழுத்தலைவா் கப்பல் இ.கங்காதரன், கோயில் நிா்வாகி ரேணுகா கங்காதரன், உபயதாரா் ராமு முதலியாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.