40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா போராட்டம்

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

News image

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னா நடத்திய தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் யாசா் அராபத், மாவட்ட துணைத் தலைவா் இஸ்மாயில் ஷெரீப், மாவட்டக்குழு உறுப்பினா் ஜீனத், வழக்குரைஞா் எம்.சுகுமாா் மற்றும் இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டம் குறித்து அவா்கள் கூறியதாவது:

வந்தவாசி வட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடற்ற மற்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இஸ்லாமியா்கள், புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசித்து வரும் இஸ்லாமியா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனு அளித்தோம்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அங்கிருந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் வந்தும்கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

போராட்டத்தில் பங்கேற்றோா் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் பா.ஜெயவேல் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.