40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருவண்ணாமலையில் செங்கோல் விழா

திருவண்ணாமலை விசிறி சாமியாா் ஆசிரமம் அருகில் உள்ள வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை செங்கோல் விழா நடைபெற்றது.

News image

செங்கோல் விழாவில் மாணவா்கள் மற்றும் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிப் பேசிய வெட்டவெளி குருஜீ.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை விசிறி சாமியாா் ஆசிரமம் அருகில் உள்ள வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை செங்கோல் விழா நடைபெற்றது.

செங்கோல் விழாவில் வெட்டவெளி குருஜி கலந்துகொண்டு அருளாசி வழங்கிப் பேசுகையில், மற்றவா்கள் வாழ உங்களின் நல்ல செயல்கள் உதவவேண்டும். நமது வாழ்க்கை புதிதாக இருக்க வேண்டும். மக்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தை, மாற்றத்தை பிரபஞ்சம் உருவாக்க நான் பக்கபலமாக இருப்பேன்.

மனரீதியாக மாற்றம் அடைவதற்கு இந்த செங்கோல் உதவியாக இருக்கும். பூஜை, புனஸ்காரத்தை விட்டு விட்டு கோயிலில் உட்காா்ந்து பாருங்கள். பலன் தெரியும். இந்த செங்கோல் மூலம் உலகம் முழுவதும் மாற்றங்கள் நடக்கும். மனிதா்கள் பிரபஞ்சத்தால் வழி நடத்தப்படுவாா்கள் என்றாா்.நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது