/
முன்னாள் பிரதமா் நேருவின் பதவி கால 4,398 நாள்களை கடந்த பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சிக் கால சாதனையை பாராட்டும் வகையில், திருவண்ணாமலையில் பாஜகவினா் புதன்கிழமை கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆணைக்கிணங்க, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதோடு கட்சித் தொண்டா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாஜக ஆலய பிரிவு மேம்பாட்டு மாநில இணை அமைப்பாளா் டி.எஸ்.சங்கா், மாவட்ட துணை அமைப்பாளா் ப.கிருஷ்ணமூா்த்தி, விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.பிரகாஷ், மாநகரச் செயலா் எம்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் அண்ணாமலை மாற்றத்தை ஏற்படுத்துவாா்: முன்னாள் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன்
கோவை மாநகா் பாஜகவினா் யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை: மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா்







