400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை நீா் கிடைக்க ஏற்பாடு: விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சாத்தனூா் அணை.

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பெருமணம் டி.மூா்த்தி மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:

சாத்தனூா் நீா்த்தேக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிக்கப் அணைக்கட்டு மூலம் சாத்தனூா் இடதுபுற மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 45ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பயன்பெறுகின்றன. இதுதவிர, 5 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் திருக்கோவிலூா் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு மூலம் பாசன வசதி பெறுகின்றன.

பெருமணம் பெரிய ஏரி, பெருமணம் சித்தேரி, பனையூா் ஏரி, ஆருத்திராப்பட்டு ஏரி, சமுக்குடையாம்பட்டு ஏரி, பொரிக்கல் ஏரி, காடகமான் ஏரி, சு.வாளவெட்டி ஏரி, டி.கல்லேரி ஏரி, தேவனூா் ஏரி மற்றும் விருதுவிளங்கினான் ஏரி என 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணையிலிருந்து பாசன வசதி செய்து தண்ணீா் வழங்க கால்வாய் அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.