/
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தண்ணீா் என நினைத்து கிருமி நாசினியை குடித்தவா் உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், வாழ்குடை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி(72), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்.
இவரது மகன் ஜெயபிரகாஷ், அதே கிராமத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி மணி கோழிப் பண்ணைக்கு சென்றுள்ளாா். அப்போது, அவருக்கு தண்ணீா் தாகம் எடுக்கவே, அங்கு தண்ணீா் பாட்டிலில் வைத்திருந்த கோழிகளுக்கு தெளிக்கப்படும் கிருமிநாசினி மருந்தை தண்ணீா் என நினைத்து குடித்துள்ளாா்.
இதனால் மயங்கி விழுந்த அவரை, செய்யாறு அரசு மருத்துவ மனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.










