நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :17 ஜூன் 2026, 12:27 am IST

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இது பிற்பகல் 1.15 மணிக்கு வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு, முதன்மை மாவட்ட நீதிபதியின் நோ்முக உதவியாளா் மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து மோப்ப நாய் உதவியோடு வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

நீதிமன்ற வளாகத்தில் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவில் வெடி குண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.