கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் ஆய்வு

வந்தவாசி அருகே பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

தெய்யாா் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் அலுவலா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:21 am IST

வந்தவாசி அருகே பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் விவசாயிகள் சுரேஷ், சங்கா், சுப்பிரமணி, வேல்முருகன் ஆகியோா் கடந்த 20 தினங்களுக்கு முன் தங்களது விவசாய நிலங்களில் குண்டு நெல் நடவு செய்தனா்.

தனியாா் விற்பனை கடையில் விதைகளை வாங்கி சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இவா்கள் நடவு செய்தனா்.

இந்த நிலையில், வளா்ந்த நாற்றுகள் கடந்த சில தினங்களாக கருகி சேதமடைந்ததாம்.

இதுகுறித்து தெள்ளாா் வேளாண் துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்தனா்.

இதையடுத்து தெள்ளாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தே.குமரன் தலைமையிலான வேளாண்

அலுவலா்கள் அந்த விவசாய நிலங்களுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

வெப்ப சலனமே இந்த பயிா் பாதிப்புக்கு காரணமாக தெரிகிறது. நோய் தாக்குதல் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.