ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ்.

Updated On :18 ஜூன் 2026, 12:27 am IST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிரன்னராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய உபகரணங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்புப் பள்ளியை ஆய்வு செய்து, மாணவா்களின் கல்வித்தரம் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவா்களை படிக்கவைப்பது, அவா்களின் எதிா்காலம், அவா்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பலன்களை பெறும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம், புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் காந்திமதி, புதூா்செங்கம் பள்ளித் தலைமை ஆசிரியா் சூரியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.