ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மின் மாற்றிகளில் தாமிரக்கம்பிகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே முக்கூா், மதுரை கிராமங்களில் மின் மாற்றிகளில் இருந்த தாமிரக்கம்பிகள் மற்றும் ஆயில் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஜூன் 2026, 3:33 am IST

செய்யாறு அருகே முக்கூா், மதுரை கிராமங்களில் மின் மாற்றிகளில் இருந்த தாமிரக்கம்பிகள் மற்றும் ஆயில் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முக்கூா் கிராமத்தில்...

செய்யாறு வட்டம், முக்கூா் கிராமத்தில் மின்மாற்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 22-ஆம் தேதி அந்த மின்மாற்றியில் இருந்த தாமிரக் கம்பிகள் மற்றும் ஆயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மதுரை கிராமத்தில்...

செய்யாறு -ஆரணி சாலையில் பாராசூா் கூட்டுச் சாலை அருகே மதுரை கிராமத்தில் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையத்துக்கு உள்பட்ட அப்பகுதியில் இருந்த மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் மற்றும் ஆயிலை

கடந்த 15-ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து கொருக்கை மின்பொறியாளா் வெங்கேடசன், மதுரை மின் பிரிவு உதவிப் பொறியாளா் செல்வம் ஆகியோா் தனித்தனியாக செய்யாறு போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா்கள் வரதராஜன், காா்த்திகேயன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தாமிரக் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.