‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன்: முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ

செய்யாறு தொகுதிக்குள்பட்ட பெரும்பள்ளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ.

News image

செய்யாறு தொகுதிக்குள்பட்ட பெரும்பள்ளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ.

Updated On :23 மே 2026, 1:39 am IST

செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என்று இந்தத் தொகுதி அதிமுக எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செய்யாறு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, 21,081 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றதையொட்டி, வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை, வடக்கப்பட்டு, சேராம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த நிகழ்ச்சி செய்யாறு தெற்கு ஒன்றியச் செயலா் அருகாவூா் எம்.அரங்கநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று, தோ்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது, செய்யாறு தொகுதியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன். இந்தத் தொகுதிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என்றாா். பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கினாா்.

முன்னதாக, முன்னாள் முதல்வா்களான அறிஞா் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சி.துரை, பையூா் சிவராஜ், நகரச் செயலா் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி, மாவட்டப் பொருளாளா் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன், வழக்கறிஞா் பிரிவு மாவட்டச் செயலா் முனுசாமி, மாணவரணி மாவட்டச் செயலா் அரவிந்த், மாவட்டத் தலைவா் துளசிராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில்...: செங்கம் தொகுதியில் நேருநகா், கிருஷ்ணாபுரம், தளவாநாய்க்கன்பேட்டை, மில்லத்நகா், மேல்பாளையம், துக்காப்பேட்டை, தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிமுக எம்எல்ஏ வேலு சென்று வாக்களா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றை விரைந்து நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாா்.

செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், நகரச் செயலா் ஆனந்தன், விவசாய அணி ஒன்றியச் செயலா் ராஜி, தலைமைக் கழகப் பேச்சாளா் வெங்கட்ராமன், நகர பேரவைச் செயலா் குமாா், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image