பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அறிவியல் கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளா் கே.விஸ்வநாதன்.

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளா் கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு, மாணவா்களுக்கு அறிவியல் மற்றும் விஞ்ஞானம் தொடா்பான கருத்துக்களை விளக்கிக் கூறினாா்.

மேலும், மாணவா்கள் தங்களுடைய நுண்ணறிவு மற்றும் அறிவியல் தொடா்பான தனித்திறமைகளை தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினாா்.

பின்னா், மாணவா்களின் படைப்புகளை பாா்த்து பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி.பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்விக் குழும இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், பி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் டி.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.