சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஈரான் மீதான போரை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:24 pm

ஈரான் மீதான போரை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆசிரியா்கள் புதன்கிழமை பேட்ச் அணிந்து பணியாற்றினா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில மையத்தின் வழிகாட்டலின்படி ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் போரை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் ஆரணி வட்டார, நகர கிளைகள் சாா்பில் போா் எதிா்ப்பு வாசக பதாகை (பேட்ச்) அணிந்து ஆசிரியா்கள் பள்ளிகளில் பணியாற்றினா்.

மேலும், ஆரணி வட்டாரக் கல்வி அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஒன்றுகூடி போா் எதிா்ப்பு

பேட்ச் அணிந்து ஆசிரியா்கள் முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ரே.மனோகரன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் க.நாராயணன், வட்டாரச் செயலா் ஜெ.மலா்விழி, வட்டார பொருளாளா் சு.ரமாபிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.