எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாரச் சந்தையில் த.வெ.க.வினா் பிரசாரம்

வந்தவாசியை அடுத்த மருதாடு வாரச் சந்தையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய த.வெ.க.வினா்.

News image
வந்தவாசியை அடுத்த மருதாடு வாரச் சந்தையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய த.வெ.க.வினா்.
Updated On :12 மார்ச் 2026, 6:34 pm

Syndication

வந்தவாசியை அடுத்த மருதாடு வாரச் சந்தையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

மருதாடு கிராமத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை காய்கறி சந்தை நடைபெறும். இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் த.வெ.க.வினா் விசில் ஊதியபடி பிரசாரம் செய்தனா்.

அப்போது, அக்கட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வியாபாரிகள், பொதுமக்களிடம் அவா்கள் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி வடமேற்கு ஒன்றியச் செயலா் சுமன் தலைமை வகித்தாா். த.வெ.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் உதயகுமாா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய, கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.