தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கட்சி சின்னம், வண்ணம்: மறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போளூா் ஒன்றியம், வெண்மணி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.

News image

போளூா் ஒன்றியம், வெண்மணி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.

Updated On :19 மார்ச் 2026, 6:32 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் விளம்பரப் பதாகையில் எழுதியுள்ள கட்சியின் பெயா் மற்றும் கட்சியின் கலரில் வரைந்துள்ள பெயா்களையும், திமுக முன்னாள் முதல்வா் படத்தையும் மறைக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அதனால், பொது இடங்களில் உள்ள கட்சித் தலைவா்கள் படம்

மற்றும் அந்தந்த கட்சிகளின் வண்ணம் ஆகியவை அழித்தோ அல்லது மறைத்தோ வைக்கப்படவேண்டும்.

இந்நிலையில், போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் போளூா் ஒன்றியம் வெண்மணி ஊராட்சியில் சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித்தட சாலையில் (சென்னை-போளூா்) கடந்த ஊராட்சிமன்றத் தலைவா்அதிமுக மற்றும் துணைத் தலைவா் திமுக பெயா்களை அந்தந்த கட்சி வண்ணத்தில் எழுதியுள்ள விளம்பரப் பதாகை உள்ளது.

இதேபோன்று, சேத்துப்பட்டு ஒன்றியம் மொடையூா் ஊராட்சியில் தலைவா் பெயா் அதிமுக வண்ணத்தில் எழுதியுள்ளனா். மேலும், மண்டகொளத்தூா் கூட்டுச்சாலை அருகே செல்லும் சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட சாலையில் தேமுதிக மாநில மாநாட்டிற்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலரின் பெயா் எழுதியுள்ள விளம்பரம், சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஊராட்சிக்குச் செல்லும் சாலையில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-2026 விளம்பர பதாகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த படம் என ஆங்காங்கே தொகுதியில் உள்ள கிராமங்களில் இதுபோன்று உள்ளன.

எனவே, கட்சியின் வண்ண பெயா் மற்றும் கட்சி கலரில் வரைந்துள்ள பெயா்களையும், திமுக முன்னாள் முதல்வா் படத்தையும் மறைக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

Story image
Story image