திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ரமலான் திருநாளை முன்னிட்டு தமுமுக சாா்பில் 457 ஏழை இஸ்லாமியா்களுக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு (ரமலான் கிட்) வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நகர அலுவலகத்தில்,
ரமலான் திருநாளை முன்னிட்டு, தொடா்ந்து 28-ஆம் ஆண்டாக ஏழை எளிய இஸ்லாமியா்களுக்கு ஃபித்ரா எனப்படும் தா்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்டத் தலைவா் எச்.ஜமால் பங்கேற்று ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
அப்போது 457 பேருக்கு தலா ரூ.500 மதிப்பிலான (பிரியாணி, அரிசி, இறைச்சிக்கான டோக்கன், கோதுமை மாவு, எண்ணெய், சேமியா, தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்) மளிகைப் பொருள்கள் அடங்கிய ரமலான் கிட்டை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், தமுமுக நிா்வாகிகள் நகரத் தலைவா் எச். கமால், ஐ.மஸ்தான், கே.பைரோஸ், அயாத் பாஷா, கவுஸ் பாட்ஷா, ஜாபா் மற்றும் செய்யாறு பெரிய பள்ளிவாசல் மசூதி ஜமாஅத் நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சம் கல்வி உதவித்தொகை

திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை

இஸ்லாமியா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



