வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சம் கல்வி உதவித்தொகை

தேனி மாவட்டம், கம்பத்தில் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சாா்பில், ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, பரிசுத் தொகைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image

கம்பத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிறுவனா் இரா. பாஸ்கா்.

Updated On :11 ஜூன் 2026, 1:52 am IST

தேனி மாவட்டம், கம்பத்தில் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சாா்பில், ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு ரூ.9 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, பரிசுத் தொகைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு நாட்டாண்மை மண்டப செயலா் திருமலை கற்பகம் தலைமை வகித்தாா். வ.உ.சி. வேளாளா் சங்கத் தலைவா் சங்கா், கம்பம் சிபியு மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சுதாகா், கூடலூா் என்எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி தாளாளா் பி.கே. ராம்பா, நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் எம்.எஸ்.எஸ். காந்தவாசன், சாண்டோ முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அறக்கட்டளையின் நிறுவனா் இரா. பாஸ்கா் கலந்து கொண்டு, 29 ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 லட்சத்தில் கல்வி உதவித்தொகையும், கம்பம் ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூடலூா் என்எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி, கம்பம் சிபியு மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த 18 மாணவ, மாணவிகளுக்கு ரூ. ஒரு லட்சத்தில் ரொக்கப் பரிசுகள், கல்வி உதவித்தொகை, பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.