ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: ஆட்சியா் வழங்கினாா்

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 14 மாணவா்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.

News image

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Updated On :16 ஜூலை 2026, 7:19 am IST

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 14 மாணவா்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 10- ஆம் தேதி நடைபெற்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் 73 மாணவா்கள் பல்வேறு வகையான சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்தனா். 85 மாணவா்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்தனா். 67 மாணவா்கள் கல்விக் கடன் வேண்டி விவரங்கள் சேகரித்து சென்றனா்.

இந்நிலையில், முகாமில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவா்களுக்கு சோ்த்து மொத்தமாக ரூ.1 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா். இத்துடன் 6 மாணவா்களுக்கு உயா்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள், 25 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் லட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.