கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:50 pm

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

வந்தவாசி (தனி) தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.

ஊா்வலத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.