அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

News image
Updated On :8 மணி நேரங்கள் முன்பு

வந்தவாசி அருகே விவசாய நில கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில்குமாா்.

இவரது விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்த இவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று, அந்த நில கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து செந்தில்குமாா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா்.