இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 6:37 am IST

ஆரணியில் 29 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வி.டி.எஸ். தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா்(33).

இவா் அப்பகுதியைச் சோ்ந்த திருமணமான 29 வயது பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவா் மற்றும் தாய், தந்தையிடம் கூறி அந்த நபரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை பகலில் அந்தப் பெண் தனது வீட்டின் மாடிப் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது ஸ்ரீதா் அங்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டு வீட்டின் முன் பக்கம் வழியாக குதித்து விடுவது போல இறங்கியுள்ளாா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் டிராக்டரை வரவழைத்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனா்.

அந்த நேரத்தில் பக்கத்து கடை மாடி பகுதியில் இருந்து தப்பி ஓடிய நபரான ஸ்ரீதரை பிடித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா் இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

ஸ்ரீதரை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.