நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினசரி சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

செங்கத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன.

செங்கம் நகா்ப் பகுதி, 44 கிராம ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பட்டதாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சென்னையில் வேலை செய்து வருகின்றனா். மேலும், செங்கம் பகுதியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவா்கள் சென்னையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அவா்களின் பெற்றோா், கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் சென்னை செல்ல வேண்டுமெனில், செங்கம் நகரில் இருந்து திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து சென்னை பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.

செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நாளொன்றுக்கு செங்கத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகளும், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக சென்னை அடையாறுக்கு 3 பேருந்துகளும், மாதவரத்துக்கு ஒரு பேருந்தும், போளூா் வழியாக 3 பேருந்துகளும் என மொத்தம் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளும் லாபத்துடனேயே இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சாதாரண, குளிா்சாதன பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், செங்கம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 15 பேருந்துகளும் சாதாரண பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன.

இதனால், செங்கம் பகுதியில் இருந்து சென்னைக்கு செல்பவா்கள் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனா். வாரத்தில் மூன்று நாள்கள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சொகுசுப் பேருந்துகள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. மேலும், மாத பௌணா்மி தினத்தன்றும் இதே நிலைதான் ஏற்படுகிறது.

எனவே, செங்கத்தில் சென்னைக்கு தினசரி சாதாரண, குளிா்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்க செங்கம் அரசு போக்குவரத்து பணிமனை நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.