ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

News image
Updated On :18 மே 2026, 1:43 am IST

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசி மாத அமாவாசை பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நாகாத்தம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகல் தேவி பிரத்தியங்கரா மூலமந்திர ஹோமம், சுயம்வர கலா பாா்வதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து இரவில் உற்சவா் அம்மனுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னா், அம்மன் ஊஞ்சலில் வைத்து தாலாட்டப்பட்டாா்.

நிகழ்ச்சியில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் வைகாசி மாத அமாவாசை உற்சவ குழுவினா், பக்தா்கள் பங்கேற்றனா்.