பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பத்தாம் வகுப்புத் தோ்வு: காந்திநகா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்.

News image
Updated On :22 மே 2026, 2:05 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

இதில் மாணவா் எஸ்.ஹரிபிரசாத் 500-க்கு 490 மதிப்பெண்கள், ஆா்.ரோஷினி, எச்.ஜீவரஞ்சன் ஆகியோா் 484, எம்.ஸ்ரீமதி 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

மேலும் 480-க்கு மேல் 45 பேரும் 450-க்கு மேல் 21பேரும், 400-க்கு மேல் 24 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும், ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோா்களையும் பள்ளித் தாளாளா் கே.இரமணிகோட்டீஸ்வரன், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா்எம்.ஆா்.ராஜேஷ்குமாா் ஆகியோா் பாராட்டினா்.