திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்களுடன் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் சனிக்கிழமை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் செல்லும் வழியில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்றாா்.
அப்போது பக்தா்களின் அன்பான வரவேற்பைப் பெற்றாா். பின்னா் பக்தா்களைச் சந்தித்து, அவா்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக அறிந்து, அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா். அமைச்சரின் எளிமையான அணுகுமுறையும், மக்களுடன் நேரடியாக தொடா்பு கொள்ளும் பண்பும் அங்கு கூடியிருந்தோரின் பாராட்டைப் பெற்றது.

தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



