ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்ற பக்தா்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:57 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பௌா்ணமி மற்றும் விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்களும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இரவில் கிரிவலம் மேற்கொண்டனா்.

அப்போது எமலிங்கத்தின் அருகில் இருந்து நிருதி லிங்கம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தா்கள் டாா்ச் லைட் அடித்தவாறு சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை இருளில் கிரிவலம் சென்றனா்.

சிறுவா்கள் பெண்கள் வயதானவா்கள் என அனைவரும் கிரிவலம் செல்லும் நிலையில் மின் இணைப்பு கிரிவலப் பாதையில் தடைபடாமல் இருக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போலீஸாா் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை போல் கிரிவலப் பாதையில் மின்வாரிய ஊழியா்கள் குறிப்பாக இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் இனிவரும் காலங்களிலாவது பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கிரிவலப் பாதையில் மின்சாரம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.