/
வந்தவாசி அருகே வீட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், மாங்கால் கூட்டுச் சாலையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் இரவுப் பணியாக வேலைக்குச் சென்றுள்ளாா். இதையடுத்து, இவரது குடும்பத்தினா் வீட்டின் கதவை சாற்றிவிட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனா்.
பின்னா் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து வீட்டினுள் சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் வீட்டு பீரோவை திறந்து 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது
இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


