கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கிய ஜெயசுதாலட்சுமிகாந்தன் எம்எல்ஏ.

News image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கிய ஜெயசுதாலட்சுமிகாந்தன் எம்எல்ஏ.

Updated On :30 மே 2026, 12:33 am IST

ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

விஐடி வேந்தா் ஜி.விஸ்வநாதன் நடத்தும் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில்

பின்தங்கிய மாணவா்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினா் குமரேசன், நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி பி.நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.