கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

Published On :

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பின்னா், அவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கூழமந்தலில்...: செய்யாறு வட்டம், கூழமந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியிடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபேசும் பெருமாளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.