அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

"உயர் தொழில்நுட்ப அறிவியல் ஆய்வகங்கள் அவசியம்'

ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்காக உயர் தொழில்நுட்ப அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பது அவசியம் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் வலியுறுத்தினார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:29 pm

DIN

ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்காக உயர் தொழில்நுட்ப அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பது அவசியம் என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் வலியுறுத்தினார்.

இப்பல்கலைக்கழகத்தின் உயிரியியல் துறை சார்பில் அறிவியல் மன்றம் தொடக்கம் மற்றும் ரூ. 35 லட்சம் மதிப்பிலான உயர் தொழில்நுட்ப ஆய்வக உபகரணங்கள் ஒப்படைக்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை  நடைபெற்றது.
விழாவுக்கு, பதிவாளர் வி.பெருவழுதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயிரியல் துறை இணைப் பேராசிரியர் எ.பன்னீர் செல்வம் வரவேற்றார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து அறிவியல் மன்றத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
இப்பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் 4 அறிவியல் துறைகளை ஒருங்கினைத்து அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து துறைகளிலும் மன்றங்கள் தொடங்க வேண்டும். அதன் மூலம் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கிராமப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவர்களுக்கு அறிவியல் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.
இன்றைய சூழலில் ஆராய்ச்சி மாணவர்களின் வசதிக்காக பல்கலைக்கழகங்களில் மேலை நாடுகளைப் போன்ற உயர் தொழில்நுட்ப அறிவியல் உபகரணங்கள் கொண்ட ஆய்வகங்கள் அமைப்பது மிக அவசியம். அதன் மூலம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும் என்றார்.
விழாவில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கணிதத் துறை இணைப் பேராசிரியர் ஆர்.விஜயராகவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.