அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டெங்கு விழிப்புணர்வுப் பணிகள்: ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் ஆய்வு

அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் முகாமிட்டு தினமும் ஆய்வு செய்து வருகிறார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:55 pm

DIN

அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் முகாமிட்டு தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நவம்பர் 2-ஆம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை அனைத்து நகராட்சிகளிலும் மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டார். இப்பணிகளை உடனிருந்து ஆய்வு செய்யுமாறு வருவாய்த் துறையினருக்கும் மாநில அரசு ஆணையிட்டது.
அதன்படி, நகராட்சி சுகாதாரத் துறையினர் தினமும் 3 வார்டுகளைத் தேர்வு செய்து டெங்கு சிறப்பு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரக்கோணம் 24-ஆவது வார்டு ஏபிஎம் சர்ச் பகுதி,  8-ஆவது வார்டு காலிவாரிகண்டிகை,  2-ஆவது வார்டு மாதவன் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், வீடு வீடாகச் சென்று நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருள்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இதில், நகராட்சி ஆணையர் கோ.கமல
குமாரி, சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் தேவராஜ் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர். இப்பணிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் கஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். அவருடன் வட்டாட்சியர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.