மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 சவரன் திருட்டு

அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:09 pm

அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.
அரக்கோணம் அசோக்நகரில் லட்சிஅய்யனார் தெருவில் வசிப்பவர் கணேஷ்குமார்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
 இதனால் இவர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கணேஷ்குமாரின் தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கணேஷ்குமார், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.