ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அரசுப் பள்ளியில் குடிநீர் குழாய்கள் உடைப்பு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஜோலார்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் குடிநீர் குழாய்களை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ஜோலார்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் குடிநீர் குழாய்களை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இதில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 192 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காவும் குடிநீர் மற்றும் கழிப்பறை பயன்பாட்டுக்காக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
இப்பள்ளியில் இரவு நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் மர்ம நபர்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி பள்ளிக்குள் சென்று மது அருந்துததல், ஜன்னல் உடைத்தல் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்கள், கழிப்பறை கட்டடத்தில் உள்ள குழாய்ககள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. 
 இந்நிலையில், திங்கள்கிழமை காலை தலைமையாசிரியை மேகலா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வந்தபோது, பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டும், சின்டெக்ஸ் டேங்க் அசுத்தம் செய்யப்பட்டும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அசோகன் கூறுகையில், மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி செய்து வருகின்றனர். நாங்களும் உடைத்துச் சென்றவற்றை அடிக்கடி சரி செய்து வந்துள்ளோம். எனினும் இது தொடர்கதையாக உள்ளது. இதற்குக் காரணம் இப்பள்ளியில் இரவு காவலர் இல்லை.
 இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களைப் பிடித்து துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் 192 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் சத்துணவு செய்வதற்கு ஒரே ஒரு பணியாளர் மட்டும் உள்ளதால் சமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பள்ளி அலுவலகத்துக்கு உதவியாளர்களும் இல்லை என்றார்.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தி, பள்ளியின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான கேட்டை உயரமாக அமைத்து, பாதுகாப்பை ஏற்படுத்தித்தர வேண்டும், பள்ளியின் நிலையை அறிந்து சத்துணவு உதவியாளர், இரவு நேரக் காவலர் போன்றவர்களை துறை அதிகாரிகள் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.