விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காப்புக் காட்டில்  வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது

ஒடுக்கத்தூர் காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய நபரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 12:01 am

ஒடுக்கத்தூர் காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய நபரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஒடுகத்தூர் வனச்சரகம் கருத்தமலை காப்புக் காடு பகுதியில் கள்ளச் சாராய விற்பனை, வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஒடுகத்தூர் வனச் சரக அலுவலர் பாலாஜி தலைமையில் வனத் துறைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வன விலங்குகளை வேட்டையாடிய இருவர் வனத் துறையினரைப் பார்த்து தப்பியோட முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார்.  மற்றொருவர் 
தப்பியோடினார்.
விசாரணையில் அவர் பீஞ்சமந்தையை அடுத்த பலாமரத்துக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய தலைமறைவான அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியை (25) தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.