குடியாத்தம் நகர பாமக சார்பில், கட்சியின் 30-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பலமநேர் சாலையில் பிச்சனூரிலும், நகராட்சி அலுவலகம் எதிரிலும், காமராஜர் பாலம் அருகிலும், கோபாலபுரத்திலும் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாம்பழங்கள், இனிப்பு ஆகியன வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாமக நகரச் செயலர் ஏ. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், மாநில துணைப் பொதுச் செயலர் கே.எல். இளவழகன் ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர்.
மாவட்டச் செயலர் ஜி.கே. ரவி, மாவட்ட அமைப்புச் செயலர் பாலாஜி, மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாநில அமைப்புச் செயலர் வெங்கடேசன், மாநில இளைஞர் அணி துணைச் செயலர் நா. குமார், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலர் என்.நூருதீன், நகரத் தலைவர் விஜயகுமார், நகர அமைப்புச் செயலர்கள் எஸ். குமார், விஸ்வநாதன், வன்னியர் சங்க நகரச் செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









