வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் திருடப்பட்ட படவேட்டம்மன் உலோகச் சிலை பென்னாகரத்தில் மீட்கப்பட்டது.
வாலாஜாபேட்டை பஜனை கோயிலில் இருந்த படவேட்டம்மன் உலோகச் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகள் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருடுபோயின. இதுகுறித்து தமிழக இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே எரப்பட்டியில் பூபதி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் சிலை மறைத்து வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சுகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் பூபதியின் விவசாயத் தோட்டத்தில் இருந்த சிலையை மீட்டு, பென்னாகரம் வட்டாட்சியர் அழகுசுந்தரத்திடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். மீட்கப்பட்ட 17.45 கிலோ எடை கொண்ட படவேட்டம்மன் உலோகச் சிலையை பென்னாகரம் வட்டாட்சியர் அழகுசுந்தரம், ராணிப்பேட்டை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. கலைச்செல்வத்திடம் ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!

300 அரசுப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


