காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஆம்பூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

அண்மையில் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான வாரியத் தேர்வு முடிவில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

அண்மையில் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான வாரியத் தேர்வு முடிவில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற வாரியத் தேர்வில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் 3-ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த மாணவர் டி. தப்ரேஸ் அஹமத் 700-க்கு 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3-ஆம் ஆண்டு எலக்டிரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த எம். ஜகன்னாதன் 686 மதிப்பெண்களும், 3-ஆம் ஆண்டு எலக்டிரிக்கல் துறையைச் சேர்ந்த மாணவி இ. செல்வி 683 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களை கல்லூரியின் தலைவர் கே. அமினூர் ரஹ்மான், கல்லூரியின் செயலரும், தாளாளருமான கே.ஷாஹித் மன்சூர், முதல்வர் த. ராஜமன்னன், நிர்வாக அலுவலர் ஹிரானி சாஹிப், துணை முதல்வர் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.