எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உணவுப் பாதுகாப்பு வேலூர் கோட்டை, ஏலகிரியில் விழிப்புணர்வு கண்காட்சி

உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேலூர் கோட்டை, ஏலகிரியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம்கள் தொடங்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2018, 6:18 pm

DIN

உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேலூர் கோட்டை, ஏலகிரியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம்கள் தொடங்கப்பட்டன.
தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 53 சுற்றுலாத் தலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில், வேலூர் கோட்டை, ஏலகிரி ஆகிய இரு இடங்களில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இம்முகாம்களில், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளிகளில் கலப்படம் செய்திட பயன்படுத்தப்படும் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மிளகில்
பப்பாளி விதைகள், அரிசியில் கல், சலவைக் கற்கள், மண் உருண்டைகள், உளுந்தில் தவிடு, தேயிலைத் தூளில் புளியங்கொட்டைத் தூள், தேனில் வெல்லப்பாகு, நெய்யில் வனஸ்பதி, மிருகக் கொழுப்பு, துவரையில் கேசரி பருப்பு, மஞ்சளில் ஈய அசிடேட், கடுகுகளில் அர்ஜிமோன் விதைகள் என உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கற்கள், வெயில் காலத்தில் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள் ஆகியவை குறித்தும், உணவுப் பொருள்களை பரிசோதனை செய்து வாங்குவது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டறிக்கைகள் மூலமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
மே 31-ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் இந்த முகாம் நடத்தப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெ.வெங்கடேசன் தெரிவித்தார்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில், வேலூரிலுள்ள வணிகர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.