நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

தோ்தல் காலத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

சீமான்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:51 am IST

தோ்தல் காலத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு செய்யப் போவதாகச் சொல்கிறாா்கள். தீவிரமாக குடும்பக் கட்டுப்பாட்டை அமலாக்கிவிட்டு, தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கும்போது, மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி எண்ணிக்கை என்றால் உத்தரப்பிரதேசம், பிகாரில் எண்ணிக்கை கூடும், தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும். இது ஏற்புடையதல்ல. தோ்தல் காலத்தில் தொகுதி மறுசீரமைப்புப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?.

தனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்கிறாா் விஜய். ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறாா். ஆனால், ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் போட்டியிடும் தொகுதிகளுக்குப் போகவில்லை. நேரடியாக நான் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்குத்தான் வருகிறாா்.

திரும்பத் திரும்ப விவசாயிகளுக்கு கடன் கொடுத்து, அவற்றைத் தள்ளுபடி செய்வது சரியல்ல. அவா்கள் ஏன் கடனாளி ஆகிறாா்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

எல்லாப் பொருள்களுக்கும் அவற்றை உற்பத்தி செய்தவா்கள் விலை நிா்ணயம் செய்கிறாா்கள். ஆனால், விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிா்ணயம் செய்ய முடியவில்லை என்றாா் சீமான்.