அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மயானத்துக்குச் செல்லும் வழி அடைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மாதனூர் அருகே மயானத்துக்குச் செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 அக்டோபர் 2018, 3:04 am IST


மாதனூர் அருகே மயானத்துக்குச் செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதனூர் அருகே பாலூர் ஊராட்சிக்குள்பட்ட ராஜபாளையம் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்த சரோஜா (70) உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழியை நிலத்தின் உரிமையாளர் முள்வேலி வைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. 
இதனால் உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, சரோஜாவின் வீட்டு முன்பு கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த டிஎஸ்பி சச்சிதானந்தம், வட்டாட்சியர் சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த முள்வேலியை தாற்காலிகமாக அகற்றி விடுவதாகவும், பின்னர் இப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.