இராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரக தலங்களில் ராகு பரிகார தலமாக உள்ளது. இங்கு வைகாசி விசாக பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Summary
Vaikasi Visakam grand festival celebrated in a spectacular manner at Thirunageswaram Temple.
தொடர்புடையது
வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் மயக்கம்?

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India




