அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சாலையை சீரமைக்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆற்காட்டை அடுத்த திமிரியில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:17 pm

ஆற்காட்டை அடுத்த திமிரியில் சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திமிரி பேரூராட்சி 9-ஆவது வார்டுக்குள்பட்டது அருந்ததி பாளையம். இப்பகுதியில்  உள்ள மண் சாலையானது சேறும், சகதியுமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சாலையின் வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பேரூராட்சி அதிகாரிகளிடம்  மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தி  மனு கொடுத்தனர். 
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.