/

தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோரிக்கை

தோல் பதனிடும் மற்றும் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:15 am IST

தோல் பதனிடும் மற்றும் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு விவரம்: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தோல் பதனிடும் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் நேய.சுநதர் கோரிக்கை மனு 
அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.